tamilnadu

img

மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - இருவர் கைது

உத்திரபிரதேசத்தில் நடந்த பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதில், தொடர்புடைய சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலியல் வன்புணர்வால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரான சிறுமியின் தந்தை 51 வயதுடையவர். பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சிறுமியின் 21 வயதான காதலன் இருவரும் திங்களன்று கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே, தானே மாவட்டம் வசிந்த் நகரில் சாலையோரத்தில் இறந்த நிலையில் கரு ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்திருந்தனர். அது குறித்து விசாரணையின் போது அது பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கரு என காவல்துறை ஆய்வாளர் யோகேஷ் குராவ் கூறியுள்ளார். விசாரணையில் தனது தந்தையாலும், காதலனாலும் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், கர்ப்பமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், விசாரணையில் சிறுமியின் குடும்பம் மும்பையில் உள்ள பன்வேலில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்தது. அங்கு அருகில் உள்ள வீட்டில் 21 வயது ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர். இதனால், வசிக்கும் இடத்தை மாற்றியுள்ளனர். இருப்பினும் சிறுமி அவரது காதலுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சிறுமியின் அறிக்கையின் அடிப்படையில், அவரது தந்தை மற்றும் காதலன் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (வன்புணர்வு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.