பொள்ளாச்சி, ஜூலை 24- பொள்ளாச்சியை அடுத்த புளியங்கண்டியில் ஆபத்தான நிலையிலுள்ள பழுதடைந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பு களை சீரமைத்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வரு வாய்த் துறையினரின் அறிவிப்பிற்கு மலைவாழ் மக்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே அமைந்துள்ள புளியங்கண்டி பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க குடியிருப்பு களுக்கு மின்சாரம் வழங்கிட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான வீடுகள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பலகட்ட போராட்டங்களையும், மனுக்களையும் அளித்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டமும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, புளியங்கண்டி பகுதிக்கு வந்த ஆய்வு செய்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மலைவாழ் மக்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லி யம்ஸ், ஆனைமலை காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஆழியார் அடுத்த புளியங்கண்டி கிராமத் தில் ஆபத்தான நிலையிலுள்ள வீடுகளை முழுவதுமாக இடித்து புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் எனவும், இதற் கான வேலையை ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்படும் என வும் தெரிவித்தனர். மேலும், முதல்கட்டமாக 10 வீடுகள் கட்டுவ தற்கான வேலைகள் நடைபெறும் என உறுதியளித்தனர். இதனை மலைவாழ் மக்கள் சங்கம் வரவேற்றுள்ளதுடன், சங்கத்தின் சார்பில் அறைகூவல் விடுத்திருந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.