tamilnadu

நிவாரண நிதி வழங்க  பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

 சீர்காழி, மே 18- பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை உதவித்தொகை யாக வழங்க ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது கொரோனா பேரிடர்  காலமாக உள்ளதால் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்கள் வறு மையில் வாடி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டு களாக ஒவ்வொரு ஆண்டிலும் மே மாத சம்பளம் மட்டுமே பெறாமல் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடி வரும் 16549 பகுதி நேர ஆசிரியர்க ளுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.