சேலம், பிப். 3- சேலத்தில் முதல்வர் நிகழ்ச்சிக் காக குடியிருப்பு வாசிகளை காவல் துறை துணையோடு அதிகாரிகள் அகற்றி வருவதால் பெரும் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வரும் பிப்.6, 7 ஆகிய தேதிகளில் சேலம் மாவட் டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்வில் ஒன்றாக மெய்யனூர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டி டம் கட்ட அடிக்கல் நாட்ட உள் ளார். அதேநேரம், மெய்யனூர் அருகிலுள்ள இட்டேரி ரோடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின் றனர். தற்போது, இப்பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கட்டிடம் கட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தமிழக முதல்வர் எடப் பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட இருப்பதாகவும் தெரிவித்து திங்க ளன்று காவல்துறை துணையோடு அதிகாரிகள் அராஜகமான முறை யில் அங்கு வசித்து வரும் பொது மக்களை வெளியேற்றினர். இத னால் ஆவேசமடைந்த குடியிருப்பு வாசிகள், அதிகாரிகளை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த மூன்று தலைமுறைகளாக இப் பகுதியில் குடியிருந்து வருகி றோம். அரசின் அனைத்து திட் டங்களும் இப்பகுதியில் செயல் படுத்தப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியிலிருந்து சிறிது தூரம் தள்ளி வசித்து வந்தோம். அங்கு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் கட்ட இருப் பதாக தெரிவித்து அங்கிருந்து எங்களை அகற்றி இங்கு குடிய மர்த்தினர். தற்போது, இந்த பகுதி யையும் விடாமல் காவல் துறை யினர் துணையோடு வருவாய் துறையினர், மின் வாரிய ஊழி யர்கள் வலுக்கட்டாயமாக காலி செய்ய நிர்பந்திக்கின்றனர். மேலும், இங்கிருந்து எங்களை அகற்றி வசிக்க முடியாத இடங்க ளில் மாற்று இடம் வழங்கப்ப டும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். அந்த இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத தால் மேற்கொண்டு என்ன செய் வது என்று தெரியாமல் வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகளுடன் தவிப்பிற்குள்ளாகி உள்ளதாக வேதனையோடு தெரிவித்தனர். இதற்கிடையே, இக்குடியிருப் புகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் திங்களன்று மாலை திடீ ரென துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியிருப்புகளில் இருந்து வெளியேற மறுத்த பொது மக்களை காவல்துறை அதிகாரி கள் இரவோடு, இரவாக வெளி யேற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது.