சென்னை, அக்.25- போராடி வரும் அரசு மருத்துவர்களின் போராட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், “18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளி விட்டிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவமனைகளையே நம்பி யிருக்கும் லட்சக்கணக்கான உள்நோயாளி களுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக் கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்ப டும் கடுமையான பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கும் உயிர்நாடி மருத்து வர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, போராடும் அரசு மருத்துவர்களை உடனடி யாக அழைத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.