tamilnadu

ரேசனில் பொருட்களை முறையாக வழங்கவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி,  ஜூலை 27- மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி வட்டம் சங்க ரன்பந்தல் வாழைப்பட்டைத் தெருவில் செயல்படும் ரேசன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் எடை குறை வாகவும், பொருட்கள் அனை வருக்கும் முறையாக வழங்க ப்படுவதில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டு கின்றனர்.  சங்கரன்பந்தல் வாழைப் பட்டைத் தெருவில் உள்ள  அங்காடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதா ரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொரு ட்களை வாங்கி வந்த நிலையில் சமீப காலமாக அக்கடையில் வழங்கப்படும் அரிசியில் எடைக் குறை வும், பில் போடுவதில் முறை கேடு நடப்பதாகவும் தொட ர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் துவரை, பாமா யில் எண்ணெய் அனைவ ருக்கும் வழங்கப்படுவ தில்லை என அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் புகார் கூறுகின்றனர். உடனடியாக மாவட்ட, வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி க்கை விடுத்துள்ளனர்.

;