tamilnadu

உவர் நீராக மாறிய நிலத்தடி நீர் இறால் குட்டைகளால் குடிநீர் தட்டுப்பாடு

சீர்காழி, ஆக.9- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருகருகாவூர் கிராமத்தில் சுமார் 1500 குடு ம்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்ற னர். இக்கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல நீராக  இருந்து வருவதால் காலம் காலமாக குடிப்ப தற்கும் சமையல் செய்வதற்கும் நிலத்தடி நீரை யே பயன்படுத்தி வந்தனர். இதனால் இக்கிரா மத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக படிப்படியாக இறால் குட்டைகள் வெட்டப்பட்டு அவைகளில் உப்பு நீர் தேக்கி இறால் வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வந்தனர். சுமார் 80 ஏக்கர் விளை நிலங்கள் இறால் குட்டைகளாக மாறியதால் அதனைச் சார்ந்துள்ள 300  ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறி நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறிவிட்ட தால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே திருக்கரு காவூர், வடகால், கடவாசல், எடமணல், கீரா நல்லூர், வெள்ளப்பள்ளம், கிளாக் தோப்பு  உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி செல்லையா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ ஜான்சன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோ ரிடம் புகார் மனு அளித்தார். குடிநீர்த்தட்டுப்பா ட்டுக்கு காரணமாகவும் விவசாய நிலங்கள் பயனின்றி போவதற்கும் காரணமாக இருந்து  வரும் இறால் குட்டைகளை தடை செய்யவும்  நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சீர்காழி தாசில்தா ரிடமும் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரி வித்தார்.

;