ஆம்பூர், மே 27- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரி சுப்பன். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.