திருச்சிராப்பள்ளி, ஆக.25- மார்க்சிய ஆசிரியரும், சிறு பான்மை மக்கள் நலக்குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க ஸ்தாபன தலைவர்க ளில் ஒருவருமான தோழர் லெ ட்சுமணன் மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி வெண்மணி இல்லத்தில் அவ ரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத் தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செய லாளர் ராஜா, மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள், ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக்அஹமது, தீக்கதிர் திரு ச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம், அலுவ லக உதவியாளர் ராணி ஆகி யோர் கலந்து கொண்டனர். கட்சியின் துறையூர் ஒன்றி யக்குழு மற்றும் மாற்று த்திறனாளிகள் சங்கம் சார்பில் டி.லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துறையூர் ஒன்றிய செயலா ளர் ஆனந்தன், மாற்று த்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கல ந்து கொண்டனர்.
கரூர்
கட்சியின் முன்னாள் மா நில செயற்குழு உறுப்பினர் டி.லட்சுமணன் மறைவிற்கு கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கட்சி அலு வலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு கூட்டத்தில் பேசினார். மா வட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், சிஐ டியு, வாலிபர் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.