tamilnadu

img

சிந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா?

அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்திய பேட் மிண்டன் வீராங் கனை பி.வி.சிந்து கடும் போராட்டத் துடன் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார். இது மிகப்பெரிய சாதனை என்றா லும், அந்த பட்டம் வென்றதிலிருந்து சிந்துவின் போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பார்ம் பிரச்சனையில் கடுமையாகச் சிக்கி உள்ளார். சீன ஓபன், ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன் என அனைத்து சீரிஸ் தொடர்களிலும் அரையிறுதி கூட தாண்ட முடியாமல் தவித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் தொடரில் கூட காலிறுதியில் காலடி வைக்கவில்லை. அதிகாரம் கலந்த மந்தமான போக்கு தான் சிந்துவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். 

“நான் உலக சாம்பியன்.. என்ன வென்று விட யாருக்குத் தைரியம் இருக் கிறது” என்ற முரட்டு மனநிலையில் விளையாடுவதும் சிந்துவின் வெற்றி யில் குடைச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த மனநிலையை மாற்றினால் தான் அடுத்தாண்டு ஜப்பானில் நடை பெறும் ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும். இல்லையென்றால் 3-வது சுற்றைக் கடப்பது கூட நீச்சல் தெரியாமல் ஆற்றைக் கடப்பது போன்றாகிவிடும். சீனா, ஜப்பான், இந்தோனேசியா, தாய் லாந்து நாட்டைச் சேர்ந்த வீராங் கனைகள் ஒலிம்பிக் தொடருக்கு வேறு விதமான மனநிலையில் கள மிறங்குவார்கள் என்பதால், சிந்து தனது பார்ம் மற்றும் செருக்கான மன நிலையை மாற்றுவது நல்லது. பட்டம் எப்பொழுது வேண்டுமானாலும் கிடைக்கும் ஆனால் பார்ம் நமது மன நிலை பொறுத்தே கிடைக்கும். இதனை உணர்ந்து செயல்பட்டால் ஒலிம் பிக்கில் தங்கம் கிடைக்கும். இல்லை யென்றால் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கூட பங்கேற்க இயலாமல் போகலாம்.