tamilnadu

பெரம்பலூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

மின்வாரிய கேங்மேன்  தேர்வு ஒத்திவைப்பு

பெரம்பலூர் டிச.2- தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் டிச.2, 3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த கேங்மேன் உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெரம்பலூர் தெரிவித்துள் ளார். எனவே பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பித்த வர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் டிச.4. முதல் திட்டமிட்ட அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் லாரி பறிமுதல்

கீரமங்கலம், டிச.2- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இருந்து அதிகமாக மணல் கடத்தல் நடப்பதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத் துள்ளது. இந்நிலையில், கீர மங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் இருந்தது.  லாரியை ஓட்டி வந்த அறந்தாங்கியை சேர்ந்த பழனிவேல் மகன் மோகன் ராஜ் (35) தப்பி ஓடி விட்டார். காவல்துறை, லாரியை பறி முதல் செய்து காவல் நிலை யத்திற்கு எடுத்துச் சென்ற னர். சம்பவம் குறித்து கீர மங்கலம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.