புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் புதனன்று கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், திமுக நிர்வாகி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.