பெரம்பலூர், ஜூன் 3- பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பை செய்ததை அகற்ற வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அம்மாபாளை யம் கிராம மக்கள், விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் என்.செல்லதுரை தலைமை யில் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந் திரனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி யுள்ளதாவது, அம்மாபாளை யத்தில் சிவன்கோயில் அருகே துவங்கி தொட்டாங் குளம் வழியாக பச்சைமலை வன எல்லை வரை செல்லும் ஏரிக்கரை வண்டிப்பாதை 30 ஆண்டுகளாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த பாதையில் தான் பொதுமக்கள் ஆடு மாடு களை மேய்ப்பதற்காக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக தொட்டாங்குளம் ஏரி நீர் வரத்து வாய்க்காலை யும், வடிக்கால் முகப்பை அடைத்து சுமார் 90 சென்ட் நிலம் அபகரிப்பு செய்துள்ளார். மேலும் ஏரிக்கரை மேல் செல்லும் பாதையும். ஏரிக்கரையையும் வெட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் ஏரிக்கரை வண்டிப் பாதை மறிக்கப்பட்டுள்ள தால் பொதுமக்கள் அவ் வழியே செல்ல இயலவில்லை. இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பாதைக்கு உரிய வழி செய்து ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள ஏரி பகுதியையும் மீட்டு நீர்வள ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர். விவசாயிகள் அளித்த புகார் மனுவிற்கு உடனடி யாக மாவட்ட வருவாய் அலு வலர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.