tamilnadu

பெரம்பலூர் , தூத்துக்குடி., மதுரை முக்கிய செய்திகள்

மூன்று மொழி கட்டாயம் படித்தால் வேலை உத்தரவாதமா? கே.பாலகிருஷ்ணன் பேட்டி
பெரம்பலூர், ஜூலை 31- மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி 31.7.2019 அன்று பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் காலையில் ஒரு மசோதா வை தாக்கல் செய்து மாலையில் நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. ஒரேநாடு ஒரே கல்வி ஒரே மதம் என்ற மோடி அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு வழிவகை செய்து கொண்டி ருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான முன்மாதிரித் தேர்வு நடை முறைப்படுத்தினால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படு வார்கள் இந்த கல்விக்கொள்கை என்ற பெயரில் கைநாட்டு பேர்வழியாக மாற்ற மத்திய மோடி அரசு செயல்பட்டு வரு கிறது. மும்மொழி கட்டாயம் படிக்கவேண்டும் என்று சொல்லும் அரசு மும்மொழி படித்தவுடன் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் தரமுடியுமா? தமிழகத்தில் எடப்பாடி அரசு இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி அனைத்து தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் திமுக நிர்வாகி துரைசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு என். செல்லதுரை, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, ஆர்.அழ கர்சாமி வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், தமுஎகச செல்வகுமார், திராவிடர் கழகம் தங்கராசு மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் பி.கிருஷ்ணசாமி, பி.முத்துசாமி ஆட்டோ சங்கம் சி.சண்முகம், ரெங்கநாதன், எஸ்.கே.சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தந்தை-மகன் படுகொலை மதுரை நீதிமன்றத்தில்  ஆறுபேர் சரண்
மதுரை, ஜூலை 31-  கரூர் முதலைபட்டியில் தந்தை - மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆறு பேர் சரணடைந்தனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் இனாம்புலியூரைச் சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியில் வசித்து வந்தார். இவருக்கு தாமரை என்ற மனைவியும், வாண்டை (எ) நல்லதம்பி (45) என்ற மகன், சரஸ்வதி, அன்னலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் நல்லதம்பிக்கு மட்டும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முதலைப்பட்டியில் ராமருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்குள்ள அய்யனார் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.  சில நாட்களுக்கு முன்பு நல்லதம்பி காலை எட்டு மணியள வில் தனது தோட்டத்தில் பறித்த பூக்களை விற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். முதலைப்பட்டி அருகே வந்த சிலர் அரிவாளால் நல்லதம்பியை வெட்டி கொலை செய்தனர்.  அப்போது ராமர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் தனது பேரனை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக வீடு அருகே காத்தி ருந்தார். நல்லதம்பியை வெட்டிய அதே கும்பல் பேரன் கண்முன்னே ராமரையும் வெட்டி கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக குளித்தலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற செளந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஆகியோர் மதுரை ஆறாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதனன்று சரண் அடைந்தனர்.

சிபிஎம் தெருமுனை கூட்டம் 
தூத்துக்குடி, ஜூலை 31- தூத்துக்குடி மாநகர்குழு சார்பில் சிதம்பரநகர்,பிராய்ண்ட் நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. மாநகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், குமாரவேல்,மாநகர் குழு உறுப்பி னர்கள் ஆறுமுகம்,முத்து கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து,நிர்வாகிகள் காஸ்ட்ரோ, மனோஜ்,அருண்,மாணவர் சங்க தலைவர் ஜாய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.