tamilnadu

img

அம்மாபாளையம் பகுதியில் சிபிஎம், திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

பெரம்பலூர், டிச.23- பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளை யம் 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பு க்கு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி, சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கா.ராதிகாகாமராஜ், மாவட்ட கவுன்சிலர் பொறுப்பிற்கு திமுக வேட்பாளர் சித்ரா புகழேந்தி போட்டியிடு கின்றனர்.  அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக தேர்தல் பார்வையாளர் மணிமாறன் ஆகியோர் அம்மாபாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தனர்.  திங்களன்று அம்மாபாளையம் பிரிவு ரோடு அருகே தேர்தல் பிரச்சார விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் சார்பில் என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி, ஆர்.முருகேசன் மற்றும் திமுக, சிபிஐ நிர்வாகி கள் சிறப்புரையாற்றினர். வேட்பாளர்கள் இருவரும் வாக்குகள் சேகரித்தனர். இதில்  திமுக, ஐஜேகே, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கிளை கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சிபிஎம் கிளைச் செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

;