tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் கா.ராதிகா உறுதி ஊழலற்ற முன்மாதிரியான ஒன்றிய கவுன்சிலராக செயல்படுவேன்

பெரம்பலூர், டிச. 23- பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையம் 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புக்கு மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி, சார்பில் மார்க்சி ஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சி வேட்பாளர் கா.ராதிகா காமராஜ் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்பகுதி யில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் அப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்கு றுதியில் எனது கணவர் 2006 – 2011 ல் ஊராட்சிமன்ற துணைத் தலைவராக இருந்த காலத் தில் இப்பகுதி மக்களிடையே தனது பணியை சரியாக செய்து நன்மதிப்பை பெற்ற வர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தன்னை வெற்றிபெற செய்தால்  அம்மாபாளையம் களரம்பட்டி பகுதியின் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடுவேன், காவிரி குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னைமர வீதியை சிமெண்ட் சாலை யாக மாற்றவும், அம்மா பாளையம் மெயின்ரோடு உள்பட அப்பகுதிகளுக்கு முறையான தண்ணீர்வசதி யுடன் கூடிய கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், விளையாட்டு மைதானத்தை சுற்றுச்சுவர் எடுத்து பரா மரித்து தரப்படும், வன்னி மலையை சுற்றியுள்ள தெருக் களுக்கு தார்சாலை அமைத்து தரப்படும், ஏரிகள் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரி தேவையான குட்டைகள் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும், 9வது வார்டு பகுதி சாக்கடைகள் கழிவுநீர் தேங்காமல் பரா மரிக்கப்பட்டு சுகாதாரம் பாது காக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்க வும் அரசு கூலியைபெற்றுத் தரவும் பாடுபடுவதாகவும் மேலும் களரம்பட்டி மாரி யம்மன் கோயில் முதல் மயா னம் வரை தார்சாலை அமைத்து தருவேன் களரம் பட்டிக்கு நெல்கதிர் களம் அமைத்து தரப்படும் எனவும் எல்லாவற்றிற்கும் மேலாக அரசிடமும் ஒன்றிய கவுன்சி லிலும் போராடியாவது கூடுதல் நிதிபெறுவதோடு ஊழலற்ற முறையில் செயல் பட்டு முன்மாதிரியான ஒன்றிய கவுன்சிலராக செயல் படுவேன் என்றும் உறுதி யளித்தார்.

;