tamilnadu

img

ஜன.31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்....

புதுதில்லி:
தனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை  மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம்வருமானம் என்ற உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கைதாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் என்பது, 2018 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.2019-20 ஆம் நிதியாண்டிற்கு அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, அக்டோபர் 31 ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்  தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர்31 வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 24 ஆம் தேதி மத்தியநிதி அமைச்சகம் அறிவித்தது. கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.