tamilnadu

img

பயங்கரவாதி முத்திரை குத்தப்படும் காஷ்மீரிகள்.. தில்லியில் தாக்குதலுக்கு உள்ளான பெண் வேதனை

புதுதில்லி:
தில்லியில், காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர் பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டுகடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தில்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியிலுள்ள சொகுசுஅடுக்குமாடி குடியிருப்பில், நூர் பாட் என்ற காஷ்மீர் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் உரிமையாளருக்கும் நூர் குடும்பத்திற்கும் இடையே பிரச் சனை ஏற்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் இருந்துவாடகை கட்டவில்லை; மின்கட்டணம் செலுத்தவில்லை என்பது வீட்டு உரிமையாளரின் புகார். ஆனால், வாடகைமுறையாக செலுத்தி இருக்கிறோம் என்பது நூர் பாட் குடும்பத்தினரின் வாதம்.இந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர், நூர் பாட்உள்ளிட்ட காஷ்மீரிகளை கடுமையாக தாக்கி இருக்கிறார்.

அதுவும் போலீசார் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. ‘இவர்கள் காஷ்மீர்காரர்கள்.. பயங்கரவாதிகள்..’ என கூச்சலிட்டவாறே அவர் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார்.இதனைப் பாதிக்கப்பட்டபெண்ணான நூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “புல்வாமாவில் ராணுவம் மீது நடத்தப் பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர் ஒவ்வொரு காஷ்மீரியும் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும்இந்த மண்ணில் இப்படித் தான் காஷ்மீரிகள் துயரைசுமந்து கொண்டிருக்கிறோம்..!” என குறிப்பிட்டுள் ளார். மேலும், தாம் தாக்கப் பட்ட வீடியோ மற்றும் படங் களை டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.