அலகாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட தலித்இளம்பெண்ணின் உடலை இரவுநேரத்தில் அவசரமாக காவல்துறையினர் தகனம் செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அரசுஅதிகாரிகள் மற்றும் காவல்துறை யினருக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு கடுமையாக கண்டித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண்ணை உயர்சாதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக்கொன் றது. இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால்முதல்வர் யோகி தலைமை யிலான பாஜக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவ தாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன.
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொலை செய்திகள்நாளேடுகளிலும், காட்சி ஊடகங்களிலும் வெளிவந்ததையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்ப்ரீத் சிங் ஆகியோர் தாமாக முன்வந்து ஹத்ராஸ் சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், கூடுதல் ஏடிஜிபி, ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிபதிகள் முன்னிலையில் தங்களின் விளக்கத்தை அளித்தனர்.அப்போது நீதிபதிகளிடம் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், தங்களின் மகளை ஒருமுறைகூட பார்க்க காவல்துறை அனுமதிக்கவில்லை. தங்கள் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்ய வீட்டுக்கு ஒருமுறைகூட கொண்டுசெல்லவிட வில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்..நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ராஜன் ராய் ஆகியோர் 11 பக்க அளவில் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
பெண் குறித்து பொய்கள் பரப்புவதை தடுத்திடுக!
பதிவேற்றப்பட்ட உத்தரவில், இந்த வழக்கில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ராஜன் ராய் ஆகியோர் அதிகாரிகளையும், காவல்துறையினரையும் கடுமையாகச் சாடி, பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குணத்தை, ஒழுக்கத்தை குலைக்கும் வகையில் பொய்யான கருத்துக்களை பரப்புவதை ஏற்க முடியாது. அதைத் தடுக்க வேண்டும்.அரசியல் கட்சிகளும், ஊடகங்களும்பாதிக்கப்பட்ட பெண் குறித்து விமர்சிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றுஎந்த தடயவியல் அறிக்கை தெரிவிக்கிறது, எந்த அடிப்படையில் தெரிவிக்கிறது என்று சட்டம்ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் ஆகியோருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பலாத்காரம் என்ற கேள்விக்கு உங்களுக்குச் சட்டத்தில் உள்ள விளக்கம்தெரியுமா என்று இருஅதிகாரி களையும் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர்.ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால் பாதி்க்கப் பட்ட பெண்ணை எவ்வாறு தகனம் செய்ய வேண்டும் என்பதற்கு மாநில அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான இறுதிச்சடங்கும் செய்யாமல் காவல்துறையினர் எரித்துள்ளனர். அந்த பெண்ணின் உற வினர்கள், பெற்றோர் கூட அந்த பெண்ணைப் பார்க்க அனுமதிக்க வில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். “ மிகவும் பதற்றமான சூழலில் அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இருந்தது” என்று கூறிய மாநில அரசு வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நிர்வாக ரீதியாக நீங்கள் கூறும்எந்த விளக்கத்தையும் நாங்கள் ஏற்கமுடியாது. அந்த குடும்பத்தாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை ஏன் வழங்கவில்லை. குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒப்படைத்து, வீட்டில் இறுதிச்சடங்கு செய்ய அனுமதித்திருக்கலாம். அல்லது அடுத்த நாள் இறுதிச்சடங்கு செய்திருக்கலாம். கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்க்க வேண்டும் என்று குடும்பத்தினர் கூறிய போதும் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோள் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.
தொடர்பில்லாத அதிகாரிகள் கருத்துக் கூறக்கூடாது
இந்த வழக்கில் ஏன் மாவட்ட கண்காணிப்பாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் விர் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள் ளார். விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணைக் குழுவினர், சிபிஐ அமைப்பு எந்த விவரங்களையும் வெளியே கசியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் நேரடியாக தொடர்பில்லாத அதிகாரிகள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க கூடாது. மக்கள் மத்தியில் எந்தவிதமான ஊக செய்திகளும்வலம் வரக்கூடாது. இந்த வழக்கை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம்ஹத்ராஸ் மாவட்ட கண்காணிப் பாளர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.