tamilnadu

img

தில்லியில் ‘ஆக்சிஜன் பார்’... 300 ரூபாய்க்கு காற்று விற்பனை

புதுதில்லி:
தலைநகர் தில்லியில் தீபாவளி பண்டிகையின்போது காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. தற்போதும் மாசுபாடு சீராகவில்லை. மனிதர்கள் சுவாசிக்க முடியாத நிலையே உள்ளது. இதனால், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி மருத்துவ அவசர நிலையும் தில்லியில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘ஆக்சி பியூர்’ நிறுவனம்,சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ‘கட்டண ஆக்சிஜன் பார்’களை, தில்லியில் துவங்கியுள்ளது.அதாவது, இந்த ஆக்சிஜன் பார்களில் 299 ரூபாய் கட்டணம் செலுத்தி, 10 முதல் 15 நிமிடங்களுக்கு மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இந்த முறையில், சாதாரணமாக உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை விட நான்கைந்து மடங்கு ஆக்சிஜன் உள்ளிழுக்க அனுமதிக்கப்படும்.சுவாசிக்கும் காற்றின் மணத்தை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை,  யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, தோட்ட நறுமணம், இலவங்கப்பட்டை மற்றும் லாவண்டர் போன்ற நறுமணங்களிலிருந்து காற்றைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு நறுமணத்திற்கும் விலைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.