tamilnadu

img

எதற்காக ‘தற்சார்பு இந்தியா’ பாசாங்கு போடுகிறீர்கள்? விமான நிலையம் தொடர்பான வழக்கில் மத்திய அரசை விளாசிய தில்லி உயர்நீதிமன்றம்

புதுதில்லி:
விமான நிலையங்கள் தொடர் பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை (Eligibility Criteria) மாற்றி அமைத்திருக்கும் விஷயத்தில், மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும்; மேக் இன் இந்தியா, தற்சார்பு இந் தியா முழக்கங்கள் பாசாங்குத் தனமானதா? என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

விமான நிலைய பராமரிப்புப் பணி தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை, திடீரென மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது, சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக் கான இந்த ஏலத்தில், ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும்நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டுவந்தது.இதற்கு எதிராக மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு (Centre for Aviation Policy,Safety and Research - CAPSR)அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத் தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தது. 

இந்த வழக்கில்தான், நீதிபதிகள்விபின் சாங்கி, ரஜனிஷ் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர்.மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம், விமான நிலையசேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களைத் துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், ‘இதுதான் எங்கள் கொள்கை’ என்று வெளிப்படையாக துணிச்சலாக கூறுங்கள்.  அரசியல் தலைமைப் பதவியில்உள்ளவர்கள் ‘மேக் இன் இந்தியா’,‘தற்சார்பு இந்தியா’ பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களைவளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், விமான நிலையங்கள் ஆணையத்தின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லை. முழுவதும் பாசாங்குத்தனமாகவே (Hypocritical) இருக்கிறது.இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக, ‘மேக் இன் இந்தியா’ பற்றி அரசியல்தலைவர்கள் பேசுகிறார்கள்? 

இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண் டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்தநாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்து விடுகிறோம்.நம் மண்ணைச் சேர்ந்த சொந்ததொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்ததன் காரணமாக, இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது தொழில் நடத்துவதும் கடினம் என்று கூறி பலர் வெளியேறி விட்டனர்.

“சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில்கட்டளையிடுவார்கள்” என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி குறித்த விஷயத்தில், மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் தங்களின்நிலைப்பாட்டை தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

;