புதுதில்லி:
இந்தியாவில் ஊடக சுதந்திரம் இல்லை என்றும், ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகசட்டங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் சர்வதேச பத்திரிகைசங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.இதுதொடர்பாக, ஆஸ்திரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சர்வதேச பத்திரிகை நிறுவனம்’ (International PressInstitute -IPI) மற்றும் மற்றொருஐரோப்பிய நாடான, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ‘சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு’ (International Federation of Journalists -IFJ)ஆகியவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:இந்தியாவில் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ததற்காக, தேசத்துரோக சட்டங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் பரவிய பின்னர் ஊடகவியலாளர் கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைபெருமளவில் அதிகரித்துள் ளது. அரசின் குறைபாட்டை அம்பலப்படுத்தியவர்களை ஒடுக்க கொரோனா காலம் பயன்படுத்தப்படுகிறது.சுதந்திரமான மற்றும் விமர் சன ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத் தப்படுகிறது. இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்குஒப்பாகும். எந்தவொரு விமர்சனத்தையும் மவுனமாக்குவதற் கான அரசின் முயற்சிதான் இது.
பத்திரிகை வேலையை தேசத்துரோகம் என்ற பிரிவின் கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக்கே ஊறு என கூறுவதற்கும் முகாந் திரமே கிடையாது. கொரோனா காலத்தில், கடந்த மார்ச் 25 முதல் இதுவரை, 55 பத்திரிகையாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி (RRAG) குரூப் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, ஊடகவியலாளர் கள் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் பயம் இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ஊடகப் பணிதொடர்பான அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.