tamilnadu

img

பீகாரில் இன்று வாக்குப்பதிவு.... வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தினால் சுட உத்தரவு...

பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 28) நடைபெறுகிறது. வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில்மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று முதல்  கட்டமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 71 சட்டமன்ற தொகுதி களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.  முதல்கட்ட தேர்தலில் 1,064 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஒரு கூட்டணியாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.இந்நிலையில் கைமூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிஷோர் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினாலோ, உடைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்களை போலீசில் ஒப்படைக்க வேண்டும். கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.