tamilnadu

img

தில்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திட்டமிட்டு சங் பரிவார அமைப்பினர் நடத்திய தாக்குதலால் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 
தலைநகர் தில்லியில் ஜாஃப்ராபாத், மஜ்பூர், பாஜன்புரா பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  அதே பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதராவாக பாஜவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறை வகுப்புவாத கலவரமாக மாறி உள்ளது. அப்போது கல்வீச்சு தாக்குதல் நடந்தது.  வாகனங்களுக்குட் தீ வைக்கப்பட்டன.
இந்த வன்முறைக்கு தலைமைக் காவலர் ரத்தன் லால் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கோகுல்புரியில் நடந்த வன்முறையில் கல் ஒன்று தலையைத் தாக்க கான்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்தார்.
டிசிபி அமித் ஷர்மா, ஏசிபி அனுஜ்,  தலைமைக் காவலர் சத்ரபால், ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்ததாக மருத்துவர் கல்ரா தெரிவித்தார்.
சுமார் 100 போலீஸ் அங்கு காவல்பணியில் இருக்கும் போதே இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையே ஜஃப்ராபாத் பகுதியில் வன்முறையின் போது துப்பாக்கியை ஏந்திய படி சுட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் ஷாருக்கான் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.வன்முறைகளை அடுத்து இந்த இடங்களில் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் செவ்வாயன்று செயல்படாது என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.