tamilnadu

 தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க 5 ஆண்டுகளாகும்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கொரோனாவுக்கான ஆஸ்ட்ராஜெனகா நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதித்து வரும் நிறுவனம் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆகும். இதன் மருந்துகள் 2021 துவக்கத்தில் பொதுப் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தாலும், 2024-ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை என்று ‘சீரம்’ நிறுவனத்தின் தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார். உலக அளவில்  15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டறியப்படும் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக இருந்தால், அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் கிடைக்க குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

;