tamilnadu

img

உ.பி போலீஸ் நடவடிக்கையால் பாஜக ‘பிம்பத்திற்கு’ அடி... மூத்த தலைவர் உமா பாரதி புலம்பல்...

புதுதில்லி:
ஹத்ராஸ் தலித் இளம்பெண்ணின் பாலியல் வன்கொலை வழக்கை உ.பி.பாஜக அரசு கையாண்டுவரும் விதத்திற்கு எதிர்க் கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல், தற்போது ஆளும்கட்சிக்குள் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.தலித் இளம்பெண் உடல் எரியூட்டப்பட்ட விதத்தை, ஏற்கெனவே பாஜக எம்.பி.க்களான ராஜ்வீர் தைலர், கவுஷல் கிஷோர், வினோத் சொங்கார் ஆகியோர் விமர்சித்திருந்தனர். தற்போது, மூத்தத்தலைவரான உமா பாரதியும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“முதல்வர் ஆதித்யநாத் அவராகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்ததால், இந்தசம்பவம் குறித்து பேச ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும்; ஆனால், காவல் துறையினர் கிராமத்திற்கு தடை விதித்த விதம், எந்தவாதங்களையும் பொருட்படுத்தாமல் பல சந்தேகங் களை எழுப்பியுள்ளது” என்றும் உமா பாரதி கூறியுள்ளார்.“இந்த குழப்பங்களையும், சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகளையும் தொடக் கத்திலேயே கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பாஜக அரசு மீதுதேவையற்ற விமர்சனங் களை தவிர்த்திருக்கலாம்” என்று புலம்பியுள்ளார்.

மேலும், “இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை பாதிக்கப்பட்டபெண்ணின் பெற்றோரைசந்திக்க ஊடகவியலாளர் களுக்கும், அரசியல் கட்சியினருக்கு உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அனுமதி தரவேண்டும்” என்றும் புத்திமதி கூறியுள்ளார்.“தனக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தேரம் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் அவர்களது வீட்டில் அமர்ந்திருப்பேன்” என்றும் “எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய பின்னர் உறுதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திப் பேன்” என்றும் உமாபாரதி தெரிவித்துள்ளார்.