tamilnadu

img

உ.பி: 7 நாட்களில் பெண்களுக்கு எதிராக 13 கொடுங்குற்றங்கள் - மாடுகளுக்கு அடையாள எண்ணாம்

உத்தரபிரதேசத்தில் கடந்த 7 நாட்களில் பெண்கள்  எதிராக 13 கொடுங்குற்றங்கள் நடந்துள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம்செய்து விட்டு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் 
கடந்த 9-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம், கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என 13 கொடுங்குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பாஜக அரசு கிரிமினல்களுக்குப் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 
பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி அரசு தற்போது பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு வயது மற்றும் இனம் ஆகியவற்றுடன் கூடிய 12 இலக்கு எண்ணை வழங்குவதில் மும்முரம் காட்டி வருகிறது. தலைநகர் லக்னோவில் மட்டும் தற்போது வரை 10 லட்சம் மாடுகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசு மாடுகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.