கொச்சி:
வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியுடன் அங்கீகாரம் பெற்ற ஊடகத்தினர் மட்டும் பங்கேற்கத்தக்க தூதரக உச்சி மாநாட்டில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாமா என்பதை மத்திய துணை அமைச்சர் வி.முரளீதரன் தெளிவுபடுத்த வேண்டும். உறுதிமொழி மீறியதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் எனவும் டிஒய்எப்ஐ கேரள மாநில செயலாளர் ஏ.ஏ.ரஹீம் கேட்டுக் கொண்டார்.
அபுதாபியில் நடந்த இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் வி முரளீதரன் நெறிமுறைகளை மீறி மஹிளா மோர்ச்சா தலைவர் ஸ்மிதா மேனனை பங்கேற்கச் செய்தார். தான் பங்கேற்றது அமைச்சர் முரளீதரனின் அனுமதியுடன் தான் என ஸ்மிதா மேனன் முகநூல் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு லோக்தந்த்ரிக் யுவ ஜனதா தளத்தின் தேசியத்தலைவர் சலீம் மாதவூர் புகார் அளித்தார். அதுகுறித்து பிரதமர் அலுவலக செயலாளர் (பொது) அம்புஜ் சர்மா விசாரித்து வருகிறார்.இந்த மாநாடு 2019 நவம்பரில் அபுதாபியில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் வி.முரளீதரன் அப்பட்டமாக விதிகளை மீறி அமைச்சரின் அதிகாரப்பூர்வ குழுவில் அங்கம் வகிக்காத ஒருவரை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பங்கேற்கச் செய்துள்ளார். அமைச்சர்கள் பங்கேற்றகூட்டத்தின் மேடையில் ஊடகவியலாளர் எப்படி வந்தார் என்ற கேள்விக்கு முரளீதரன் இப்போது பதிலளிக்க வேண்டியிருக்கும்.இதுகுறித்து ஏ.ஏ.ரஹீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்த நாட்டில் பத்திரிகையாளர்கள் கூட சிறப்பு அனுமதியுடன் மட்டுமே கலந்து கொள்ளக் கூடியஇந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளஸ்மிதா விண்ணப்பித்தார் என்பதற்கானஆதாரத்தை அவர்களால் முன்வைக்க முடியுமா? வளைகுடா நாடுகளில் இதுபோன்ற உச்சிமாநாட்டு செய்திகளை ஒழுங்குபடுத்தும் எமிரேட்ஸ் மீடியா கவுன்சில் இந்த பி.ஆர் முகவருக்கு அங்கீகாரம் அளித்ததா? அமைச்சர் இப்போது இந்த பிரச்சினையில் மாயையை காட்டுகிறார். சத்தியப்பிரமாணத்தைமீறியதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று ரஹீம் கேட்டுக் கொண்டார்.