tamilnadu

img

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு

மும்பை,நவ.28- மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வியாழ னன்று மாலை பதவியேற்றுக் கொண்டார்.  தொடர் இழுபறி, பர பரப்புகளுக்கு பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய  கட்சி களின் மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி கூட்டணி அரசு ஆட்சி யமைத்தது.   மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத் தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் ஆளு நர்  பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர்.  அதை ஏற்று புதிய அரசு அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் , டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு கெடு விதித்தார். இந்நிலையில்  சிவசேனா தலைமையிலான கூட்டணி அர சின் பதவி ஏற்பு விழா வியாழ னன்று மாலை மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. உத்தவ் தாக்க ரேவுக்கு ஆளுநர்  பகத்சிங் கோஷ் யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.