tamilnadu

img

ஜேஎன்யு போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி?

புதுதில்லி:
தில்லி ஜவகர்லால் நேரு(ஜே.என்.யு) பல்கலைக்கழகத் தில் உள்ள விவேகானந்தர் சிலையின் பீடத்தில், பெயிண்ட் மூலம் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சீர்குலைக்கும் வேலையில், இந்துத்துவா மதவெறி அமைப்புக்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. மத்திய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப் பாடு, கல்வி, விடுதிக் கட்டண உயர்வு, பல்கலைக்கழக பிரிவுகள் தனியார்மயம்; இதற்கு எதிராக போராடினால் ரூ.20 ஆயிரம் அபராதம் என்று அடக்குமுறைகளை ஏவி வருகிறது.ஆனால், இந்த அடக்குமுறைகளை ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் உறுதிமிக்க போராட்டத் தால் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர் களின் போராட்டத்தை திசைத் திருப்பும் வகையில், மர்ம கும்பல் ஒன்று ஜவகர்லால் நேருபல்கலைக்கழக வளாகத்தில்அமைந்துள்ள விவேகானந் தர் சிலையை சேதப்படுத்தியுள் ளது. மேலும், சிலை அமைந்திருக்கும் பீடத்தில் பெயிண்ட் மூலம் தகாத வார்த்தைகளை எழுதி, கலவரத்தை தூண்ட முயற்சித்துள்ளது.இதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

;