tamilnadu

img

திருடர் என்று சொல்லி விட்டார்... யுவர் ஆனர்..

புதுதில்லி, ஏப். 15 -ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானக் கொள்முதலில், மோடி அரசு ஊழல் செய்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இவ்விவகாரத்தில், மோடி - அம்பானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், “ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஒரு திருடர் என்றே குற்றம் சாட்டுவதாகவும், ஏனெனில் அனில் அம்பானி ரூ. 30 ஆயிரம் கோடியைத் திருடுவதற்கு மோடி உதவி செய்திருக்கிறார்” என்றும் ராகுல் காந்தி பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், பிரதமரை திருடர் என்று ராகுல் காந்தி சொல்லி விட்டதாக, பாஜக உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியுள்ளது. உச்ச நீதிமன்றம் தற்போது, ‘மோடியை தரக்குறைவாக பேசியது ஏன்?’ என்று கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;