தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை. அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும். தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
*****************
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
*****************
நவம்பர் 8 அன்று இரண்டாவது நாளாக திருவொற்றியூரில் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கைதுமற்றும் நிர்வாகிகள் கைது செய்யப் பட்டனர்.
*****************
சாலமன் தீவில் லதா நகரில் இருந்து தென்மேற்கே 133 கி.மீ. தொலைவில் ஞாயிறன்று காலை கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என்று அமெரிக்கபுவியியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
*****************
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் கூட்டணிஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவுடன்தான் அடுத்த ஆட்சி அமையும் என்று பேசிவருகின்ற பாஜக தலைவர்களுக்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
*****************
நாட்டில் இதுவரை 11 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 791 லட்சம் கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11 லட்சத்து 94 ஆயிரத்து 487 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
*****************
மத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமையன்று நடந்த விழாவில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.