tamilnadu

img

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் அநேகமாக இல்லை

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் அநேகமாகக் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருடன் அது இணைக்கப்பட்டுவிடலாம் எனவும் தெரிகிறது.

நாடாளுமன்ற இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத்தொடரும் வழக்கமாக நவம்பர் கடைசி வாரத்தில் துவங்கும். அது இந்த ஆண்டு நடைபெறாது.

நாடாளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் 1975, 1979 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் குளிர்காலக் கூட்டத்தொடர்கள் நடந்ததில்லை. இப்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தில்லியில் அதிகமாக இருப்பதால், நடத்தப்பட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.   

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்வு அனுப்புவதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூடி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தேதியைத் தீர்மானித்திட வேண்டும். ஆனால் இதுவரை அந்தக்குழு கூடவில்லை. இதனை பட்ஜெட் கூட்டத்தொடருடன் சேர்த்தே நடத்திடலாம் என அரசாங்கம் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற சமயத்தில் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உட்பட பாதிப்புக்கு உள்ளானார். இதுவரை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார், திருப்பதி உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி ஆகிய மூவரும் இறந்துள்ளார்கள்.  

(ந.நி