புதுதில்லி:
வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு விரிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஒருவாரம் அவகாசமும் அளித்துள்ளது.கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலையின்றி வருமானமின்றி அவதிப்பட்டனர். இந்நிலையில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன்,கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப் பட்டது.ஆனால் வங்கியில் வாங்கிய கடனுக்குவட்டி, வட்டிக்கு வட்டி சுமை அதிகரித்தது.குறைந்தபட்சம் கொரோனா காலகட்டத்துக் கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர்மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடிவரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என்று தெரிவித்துள்ளது. இதன்பின்னர் வழக்கு விசாரணைஅக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்தியஅரசுக்கு ஒருவார கால அவகாசம் வழங்குவதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்அளிக்கும் வகையில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.