கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிறுமி பார்வை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என டெல்லி அகில இந்திய மருத்து அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும்.
எய்ம்ஸ், டெல்லி, குழந்தை நரம்பியல் பிரிவு, குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ சோதனையில் ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
இந்த பாதிப்பு குறித்து குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.