மும்பை:
அரசியலமைப்பு சட்டம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் கடுமையாகச் சாடியுள்ளார்.மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சிவசேனை உறுதியாக உள்ளது. ஆனால் பாஜக தரமறுக்கிறது. இந்நிலையில் சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கானது, அது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. சரியான முறையில் மகாராஷ் டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.