புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் ஆண்டுச் செலவு 6 கோடி என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி கடும் நிதிச்சிக்கலில் உள்ளது. அதனால் அரசு அதிகாரிகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்ட வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்தார். ஆனால் இதுவரை இருந்த ஆளுநர்களிலேயே கிரண்பேடி தான் ஆளுநர் மாளிகையின் செலவுகளை இருமடங்காக்கி உள்ளார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்று அவர் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் வெளியிட்ட அந்தத் தகவலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம்,
2010-2011 - ரூ. 3.09 கோடி
2011-2012 - ரூ. 2.91 கோடி
2012-2013 – ரூ. 3.82 கோடி
2013-2014 - ரூ. 3.50 கோடி
2014-2015 - ரூ. 3.55 கோடி,
2015-2016 - ரூ. 3.27 கோடி
2016-2017 - ரூ. 4.07 கோடி
2017-2018 - ரூ. 4.87 கோடி
2018-2019 - ரூ. 6.04 கோடி
2019-2020 - ரூ. 6.19 கோடி
செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சுமார் 3 கோடியாக இருந்த ஆளுநர் மாளிகையின் செலவுகளை தற்போது 6 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது தெரியவந்துள்ளது.