புதுதில்லி:
கொரோனா பொதுமுடக் கத்தின்போது, நூறுநாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டம்தான் கிராமப்புற மக்களைப் பட்டினியிலிருந்து பாதுகாத்தது என்று ஹிந்துஸ் தான் யூனி லீவர் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் மேத்தா கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தேவைப் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான யூனிலீவர் (Hindustan Unilever Limited - HUL), பிரிட்டிஷ் - டச்சு நிறுவனமான யூனிலீவரின் துணை நிறுவனமாகும். பல்வேறுஅழகு சாதனங்கள், சோப், வாஷிங்பவுடர் மற்றும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது.இந்நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ்மேத்தா, பங்குதாரர்களுடனான காணொலி கூட்டத்தில்அண்மையில் உரையாற்றியுள்ளார். அப்போது, “ஹிந்துஸ் தான் யூனி லீவர் நிறுவனம் கடந்தஜூன் வரையிலான காலாண் டில் 7 சதவிகிதம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது; அதன்பிறகு செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது; இதில்,அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள்விற்பனை 15 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது; இந்நிலை மேலும் முன்னேற்றம்அடையும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “தங்கள் நிறுவனத்தின் நஷ்டத்துக்கு கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படுத்திய முடக்கமே முக்கியக் காரணம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “இந்த பொதுமுடக்கக் காலத்தில், மக்கட் பலர்தங்களின் வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்து விட்டனர்” என்று கவலைப்பட்டுள்ள சஞ்சீவ் மேத்தா,கிராமப்புறங்களில் இந்த நிலைஅதிகமாகக் காணப்பட்டதாகவும், அப்போது, “மகாத்மா காந்திகிராமப்புற கட்டாய வேலைவாய்ப்பு திட்டம்தான் மகளுக்குப் பெரிதும் கை கொடுத்தது” என்றும் தெரிவித்துள்ளார். “இலவச உணவு மற்றும் ஆதார விலை அதிகரிப்பு ஆகியவையும் கிராம மக்களுக்கு உதவியாகஇருந்தது” என்று குறிப்பிட்டுள் ளார்.