தெலங்கானாவில் 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தெலங்கானாவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க அம்மாநில முதல்வர் சந்திர சேகர்ராவ் முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே நடந்த தேர்வுகள் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.