tamilnadu

img

அதானிக்கு விற்கப்படும் தமிழ்நாடு - ஒரு நேரடி ரிப்போர்ட் (சி. ஸ்ரீராமுலு, பெ.ரூபன்)

“சும்மாவே ஆடுகிற பேய்க்கு சாம்பிராணி புகை போட்டதுபோல” என்பது கிராமத்து பழமொழி. அதை மெய்ப்பிக்கும் விதமாக ஆடி வருகிறது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தாலும் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. விரக்தியின் உச்சிக்கே சென்ற மோடி இராமநாதபுரம் போகாதே, அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்.. சென்னையில் கடலுக்குள் போகாதே அதானிக்கு விற்றுவிட்டோம்... இப்படி ‘அதானி’ என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழகத்தின் மண்ணையும், வளத்தையும் களவாட திட்டம் போட்டிருக்கிறார்கள்.

யார் இந்த அதானி?

குஜராத்தின் ஜவுளி வியாபாரி கவுதம் அதானி, மும்பை வைர வியாபாரிகளிடம் வேலைக்கு சேர்ந்து  அவரே அந்த தொழிலில் புரோக்கராக மாறி லட்சம், கோடிகளை கல்லா கட்டியவர். குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் நட்பை நாடிய போது பேரம் ‘கனகச்சிதமாக’ முடிந்ததும் முந்த்ரா, விசாகப்பட்டினம், கோவா, காட்டுப்பள்ளி என 8 துறைமுகங்கள் அதானிக்கு சொந்தமானது. வியாபாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் விளையாடி வரும் இவர் மின்னல் வேகத்தில் சொத்துக்களை குவித்துள்ளார்.

ஏன் வாங்குகிறது?

இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்று காட்டுப்பள்ளி.  தமிழக- கர்நாடகாவின் ஏற்றுமதி, இறக்குமதியின் நுழைவு வாயில். கொழும்பு, சிங்கப்பூருக்கு அடுத்து கப்பல் பழுது பார்க்கும் மிகப் பெரிய தளம். ஜப்பான், கொரியாவோடு போட்டியிடும் வகையில் 14 அடி ஆழம், 3.35 கி.மீ. தூரம் கொண்டதால் வீசிய வலையில் சிக்கிக் கொண்ட எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1,950 கோடியைக் கொடுத்து 97 சதவீத பங்குகளை ‘கை’ மாற்றிக் கொண்டது அதானி குழுமம். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியுள்ளதால் அதானியின் கழுகுப்பார்வை அங்கேதான் சுற்றுகிறது. இந்த தளங்களை ‘கபளீகரம்’ செய்வதன் மூலம் தமிழக வர்த்தக கடற்பரப்பை ஒட்டுமெத்தமாக கைக்குள் கொண்டு வருவதே அதன் நோக்கம்.

அச்சத்தின் பிடியில்...

‘நாட்டின் இரண்டாவது பெரிய ஏரியை அழிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் சூழலியல் அனுமதி தரக்கூடாது’ 

“சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலத்தை கையகப்படுத்தினால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும், எதிர்காலம் பாழாகிவிடும். நிலங்களைப் பாதுகாப்பாக பராமரிப்பதுதான் அரசின் கடமை என்பதால் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுக்கக் கூடாது” என்கிறார் சிபிஎம் மீஞ்சூர் பகுதிச் செயலாளர் என். ரமேஷ் குமார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் அனுமதி கோரி துறைமுக நிர்வாகத்திடம் அதானி கடிதம் போடுகிறார். இந்த ஜனவரி மாதம்  கோப்பு எண் ஒதுக்கியதால்,  அலையாத்தி வனச் செல்வம், வளங்களும் அழிந்து போகும் என்பதை இந்தப் பகுதி மக்கள் மட்டுமல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மக்களவையில் விரிவாக பேசியதையும் சுட்டிக்காட்டினார் பழவேற்காட்டில் வசிக்கும் மீன்பிடி தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் டி.நித்தியானந்தம்.

என கிராமசபையில் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான விபங்களைச் சேகரிக்க தலைநகரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ள காட்டுப்பள்ளி தனியார் துறைமுக பகுதிக்கு சென்றபோது, பல  அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. வங்கக் கடலோரம் அதானி குறி வைத்திருக்கும் துறைமுகத்திலிருந்து பழவேற்காடு செல்லும் ஒரு வழி தார்ச் சாலையின் இருபுறமும் பச்சைப் பசேலென்று பரந்து விரிந்து பூத்துக் காய்த்துக் குலுங்கும் முந்திரி தோப்பு, காடுகள், ஆங்காங்கே ஓங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்களும், சவுக்கு, தைலமர தோப்புகளும் சுமார் 20 கி. மீ. வரையும் வரவேற்கின்றன. இடையிடையே தீவுகள் போன்று அமைந்திருக்கும் காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி குப்பம், அத்திப்பட்டு, ராஜந்தோப்பு, காளாஞ்சி, காட்டூர், சிந்தாமணிபுரம், கருங்காலி போன்ற கிராமங்களில் சிலர் தங்களுக்கு வாழ்வளித்து வரும் உள்நாட்டு மீன் வகைகளை பிடித்துக் கொண்டும், படகு சவாரி செய்து வருவதையும் பார்க்க முடிந்தது. பெரும்பகுதி மக்கள் அச்சத்தின் பிடியில் உறைந்திருந்தனர். காரணம், விரிவாக்கம் என்ற பெயரில் சுமார் 6,500 ஏக்கர் நிலப்பரப்பை அதானி குழுமம் ஆக்கிரமித்து உள்ளதால் மரபுசார்ந்த தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறி போன்று குனிந்து நிற்பதாகும்!

பேராபத்து

அதானி ஆக்கிரமிக்கும் சுமார் 2000 ஏக்கர் நிலம் கரைக்கடலில் வருகிறது. முழுக்க முழுக்க ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டதாகும். இதுதான் அம்மக்களின் வாழ்வாதாரமாகும். அங்கு மணலைத் தோண்டி ஆழப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல், கப்பல் தளம் அமைத்தல் போன்ற பணிகளால் தரை மட்டம் உயரும். கடல் மட்டம் குறையும். கடல் முகத்துவாரம், உப்பங்கழி, ஆறு, ஓடை, வாய்க்காலுக்கும் உள்ள ‘தொப்புள் கொடி உறவுகள்’ அறுக்கப்படும்.

பருந்துக்கு இரை...

பேரழிவுகளின்போது சேதங்களை கட்டுப்படுத்தும் அரண்களான கருங்காலி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு போன்ற கரைக்கடல் பகுதிகள் “கொல்லை பாழானாலும் பருந்துக்கு இரை பஞ்சமில்லை” என்பதைப்போல அழிக்கப்படும். இதுதான் அதானியின் சதித்திட்டம். இதனால், பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த சூழலியலும், நில அமைப்பும் தலைகீழாக புரட்டிப் போடப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சுய விருப்பக் ‘கத்தி’

போராட்டக்களமாக மாறியிருக்கும் காட்டுப் பள்ளியில், தாமாகவே முன் வந்து நிலத்தை கொடுத்தால் பணம் அதிகம் கிடைக்கும், மொத்தமாக வெளியேறினால் ஒருவருக்கு வேலை, 

வெளிநாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளுக்கு வசிப்பிடம் பழவேற்காடு. சமீபத்தில்கூட ‘ஆலா’ என்ற அரிய கடற்பறவை பதிவாகியுள்ளது. பறவைகள் மட்டுமல்ல;  நீர்வாழ் உயிரினங்களும், நுண்ணுயிர்களும், மீன் வகைகளும் அழிந்து போகும் என மீனவ இளைஞர் ஒருவர் ஆதங்கப்படுகிறார்.

துறைமுகம் விரிவாக்கம் என்பதைவிட ஏற்கனவே உள்ள 330 ஏக்கர் நிலப்பரப்பை 20 மடங்குகளாக அதிகரித்து அரசிடம் உள்ள சிப்காட் மற்றும் தனியார் விவசாய நிலங்களை பணமாக்குவது அதானி குழுமத்தின் குறிக்கோளாக இருப்பது குறித்து சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபாலிடம் கேட்டபோது, “தமிழக ஆட்சியாளர்களை நினைக்கும் போது நெஞ்சில் தைரியம் இல்லை; நேர்மையும் இல்லை. வஞ்சகமாகப் பேசுவார்கள். வாய்ச் சொல்லில் அவர்கள் வீரர்கள்... என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவு படுத்த வேண்டியுள்ளது” என்றார்.

மாற்று இடம் அல்லது சொந்த வீடு  என்ற ‘ஆசை’ வார்த்தைகளால் மக்களை குழப்பத்தின் உச்சத்தில் ஆழ்த்துவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ‘நவீன’திட்டம் சொந்த மக்களே “கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளங்கள்” என இடைத்தரகர்களாக மாறியவர்கள் ‘சுயவிருப்பக் கத்தியை’ கூர் தீட்டிக் கொடுத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதானிக்கு அனுமதி கூடாது...

எண்ணூரில் துவங்கி பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வரைக்கும் “சுற்றுச்சூழல் ரீதியாக புவிசார் பகுதி”என அறிவித்திருப்பதை தனக்கு வசதியாக மறைத்த அதானி, அந்த பகுதியில் எதற்கும் பயன்படாத ‘பொட்டல் காடு’அதிகமாக இருக்கிறது; அதில் 2,000 ஏக்கரை எடுத்துக் கொள்கிறோம் என மத்திய அரசிடம் உண்மைக்கு மாறாக தெரிவித்திருப்பதையும் கடலில் மண்ணை கொட்டி மேலும் 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய உள்ளதையும் அனைத்து விதிமுறைகளையும் மீறி அதானிக்கு 6,113 ஏக்கர் நிலத்தை வழங்கும் பாஜக அரசு நமது மக்களுக்கு ‘பட்டை’ நாமம் போட்டுள்ளதையும் சென்னையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில்  அம்பலப்படுத்தினார் நீதியரசர் அரி பரந்தாமன்.

10 லட்சம் பேர் காலி

அதானி கம்பெனியின் விரிவாக்கத்தால் கடலுக்கும் பழவேற்காடு ஏரிக்கும் இடையில் தீவு போல் நீளும் அடர்ந்த பசுமை வளமுடைய மணல் குன்றுகள் சிதைந்து போகும். துறைமுகத்தின் அலை தடுப்பு சுவர்கள் நிலப்பகுதியை அரித்துவிடும். ஏரியும், வங்கக் கடலும் ஒன்றிணையும்.  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பேராபத்தை சந்திக்கும்.  கடல் சார்ந்த இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைக் காக்கும்  சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து, 10 லட்சம் பேரை பேரழிவில் தள்ளுகிறது இந்த திட்டம். தொடர்ந்து வரும் ஆபத்துகளால் அந்தப் பகுதி ஏழை-எளிய மக்கள் உயிர்வாழ எங்கே செல்வார்கள் என்பதுதான் அந்தப் பகுதி மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கேள்வியாகும்.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள்-சாகவோ? அழுது கொண்டிருப்போமோ ஆண் பிள்ளைகள் அல்லமோ? உயிர்வெல்லமோ என்ற மகாகவி பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.