tamilnadu

img

தாஜ்மகால் மூடப்பட்டது

புதுதில்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகின்ற உலகப் புகழ்பெற்றதாஜ்மகால் மூடப்பட்டுள் ளது.கொரோனா வைரசின் தாக்குதலுக்கு இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டு ள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக  பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை, திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், உலக அதிசயங்களில் முக்கியமானதுமான தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

;