tamilnadu

img

சொப்னாவின் 2 வங்கி லாக்கர்களில் இருந்தது ஒரு கோடி ரூபாய்; ஒரு கிலோ தங்க நகைகள்

கொச்சி:
தங்க கடத்தல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சொப்னா சுரேஷின் 2 வங்கி லாக்கர்களில் இருந்து ஒரு கோடி ரூபாயும் ஒரு கிலோ தங்கமும் என்ஐஏ கைப்பற்றியுள்ளது. பெடரல் வங்கியின் திருவனந்தபுரத்தில் உள்ள இரண்டு கிளைகளில் இவை பாதுகாக்கப்பட்டிருந்தன. சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரது காவல் முடிந்து ஆஜர்படுத்தியபோது இவற்றை கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ ஒப்படைத்தது.

திருவனந்தபுரம் பெடரல் வங்கியின் ஒரு கிளையில் சொப்னாவின் பெயரில் ரூ.36.5 லட்சமும், மற்றொரு கிளையில் ரூ.64 லட்சமும், 982 கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டன. தங்ககடத்தல் மூலம் இவற்றை சொப்னாசம்பாதித்திருப்பதாக என்ஐஏ கருதுகிறது. இதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடத்தப்படுவதாகவும், வங்கியும் லாக்கர்களும் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் விசாரணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இவை சொப்னாவின் பாரம்பரிய சொத்து மூலம்கிடைத்தவை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.சொப்னா சுரேஷ், முதல் குற்றவாளியான பி.எஸ்.சரித், நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஆகியோர்என்ஐஏ காவல் முடிந்து வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கம் கடத்தல் உட்பட மற்றவர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள் ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மலப்புறத்தில் கைது செய்யப்பட்ட கே.டி.ரமீஸ் தங்க கடத்தலில் வகித்தமுக்கிய பங்கு குறித்து மூன்று குற்றவாளிகளும் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுங்கத்துறையினரின் கைது
சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை பெங்களுருவில் என்ஐஏ கைதுசெய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் சுங்கத்துறையினர் வெள்ளியன்று காலை கொச்சியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்துக்கு வந்து சொப்னாவிடமும் சந்தீபிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்துகைது செய்வதற்கான மனுவை என்ஐஏநீதிமன்றத்தில் அளித்தனர். அதன்படிமாலையில் இருவரையும் நீதிமன்றத் தில் என்ஐஏ ஆஜர்படுத்திய போது சுங்கத்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.ஏற்கனவே சரித்தை தங்களது காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். இந்நிலையில் சொப்னாவையும், சந்தீபையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. வெள்ளியன்று நீதிமன்றத்தில் தனக்கு மனநலசிகிச்சை தேவைப்படுவதாக சொப்னா கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்தாலும் கணவனையும் மகளையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே சொப்னா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு புதனன்று (ஜுலை 29) விசாரணைக்கு வருகிறது.

;