tamilnadu

img

தில்லி ஷாகின்பாக் போராட்டக்காரர்கள் வெளியேற்றம்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தில்லியில் ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம்அதிகரித்து வருகிறது.இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் தில்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்துசெல்ல மறுத்தனர். இதனையடுத்து, அவர் களை தில்லி போலீசார் அப்புறப்படுத்தினர். 101 நாட்களாக ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது.

;