tamilnadu

img

கும்பகோணத்தில் இருவருக்கு தனிவார்டில் சிகிச்சை

கும்பகோணம்:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் விழிப்புணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி ஊராட்சிநிர்வாகங்கள் கொரோனா வைரஸ் குறித்து துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் மூவேந்தன் (37). இவர் வியாழக்கிழமை அபுதாபியிலிருந்து வந்துள்ளார். அதே போல பட்டீஸ்வரம் அடுத்துள்ளதென்னூர் கீழத்தெரு வரதராஜ மகன் ராஜ்குமார் (36).இவர் கடந்த 12 ஆம் தேதி சவூதியிலிருந்து வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து அதிக காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கொரோனாநோய்த் தொற்று அறிகுறிகள் இருந்ததால் கும்பகோணம்அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுமருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

;