tamilnadu

img

மூத்த வழக்குரைஞர்கள் இல்லங்களில் சிபிஐ ரெய்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அறிஞர்கள் கண்டனம்

புதுதில்லி, ஜூலை 11- உச்சநீதிமன்ற மூத்த வழக்குரை ஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் தலைவர்களுமான ஆனந்த் குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகி யோர் இல்லங்களில் வியாழக்கிழமை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) சோதனை மேற்கொண்டி ருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜூலை 11 வியாழனன்று காலை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூத்த வழக்குரைஞர்களான ஆனந்த் குரோவர் – இந்திரா ஜெய்சிங் ஆகி யோரின் இல்லங்களுக்குச் சென்று சோதனை மேற்கொண்டிருப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்களைத் தெரி வித்துக் கொள்கிறோம். இவர் களுக்குச் சொந்தமான மும்பை  மற்றும் தில்லி ஆகிய பெருநகரங் களில் உள்ள இவர்களின் இல்லங் களில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆனந்த் குரோ வரையும், இந்திரா ஜெய்சிங்கையும் மிரட்டிப் பணியவைத்திடும் விதத்தில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.  இது அரசாங்கத்தின் மிருகத்தன மான மிரட்டல் நடவடிக்கை மற்றும் அதி கார துஷ்பிரயோகமே அன்றி வேறல்ல.  இவ்விரு வழக்குரைஞர்களும் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் தங்களது, ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் சார்பில் சிபிஐ அமைப்பு மேற்கொள்ளும் புலனாய்வு விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிவந்தபோதிலும், இவர்களது இல்லங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உரிய அறிவுரை களை இந்த அரசாங்கம் அளித்திட வேண்டும் என்று நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர். இதில் மாநிலங்களவை உறுப்பின ர்கள் டி.கே. ரங்கராஜன், து. ராஜா, கபில் சிபல், ஆனந்த் சர்மா உட்பட பலர் கையொப்பமிட்டிருக்கின்றனர்.

அறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்
இதேபோன்று பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப், சி.பி. சந்திரசேகர், ஜெயதி கோஷ் உட்பட சுமார் நூறு அறிஞர் பெருமக்களும் மனித உரிமை ஆர்வலர் களும் கண்ட னக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறி யிருப்பதாவது: மூத்த வழக்குரைஞர்களான ஆனந்த் குரோவர் – இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பு ஒரு மனித உரிமைகள் ஸ்தாபனமாகும். இது மும்பையில் பதிவு அலுவலகத்தைப் பெற்றிருப்பதுடன் புதுதில்லியில் இயங்கி வருகிறது. 1986இல் திருமதி ஜெய்சிங், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் மூத்த வழக்குரைஞரானார். 2009இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்குரைஞருமாவார். திருமதி ஜெய்சிங், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஒழிப்பு தொடர்பான ஐ.நா.ஸ்தாபனத்தில் உறுப்பினராகவும் இருந்தார். 2005இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றிருக்கிறார். இவரது சேவை களுக்காக இவர் பல்வேறு விருது களைப் பெற்றிருக்கிறார். திரு. குரோவர் 2008-2014 ஆண்டுகளுக்கிடையே ஐ.நா. ஸ்தா பனத்தின் சுகாதார உரிமைகளுக்கான அமைப்பில் சிறப்புப் பிரதிநிதியாக நிய மிக்கப்பட்டிருந்தார். இவர்களுடைய லாயர்ஸ் கலெக்டிவ் அமைப்பின் இடை விடா முயற்சிகளின் காரணமாகத்தான் இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்புக்கான திட்டம் தீட்டப்பட்டது. இந்திய சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் உரிமைகளுக்காக எண்ணற்ற வழக்குகளை லாயர்ஸ் கலெக்டிவ் மேற்கொண்டிருக்கிறது. எனவே, ஆனந்த் குரோவர் - இந்திரா ஜெய்சிங் ஆகியோரை மிரட்டி  பணியவைத்திடக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நட வடிக்கைகளை உடனடியாக நிறுத்த  வேண்டும். பம்பாய் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நிலுவையி லிருப்பதால், லாயர்ஸ் கலெக்டிவ் மீது புனையப்பட்டுள்ள கிரிமினல் குற்றச் சாட்டுகளை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் சட்டங்களையும் அரசு எந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும். இந்த விஷயத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்துக்கொண்டு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். (ந.நி.)

;