tamilnadu

img

ராணுவத்திலும் சுயசார்பு.. 101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை

இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களாகவே அரசு தரப்பிலும் சரி, மக்கள் தரப்பிலும் சரி, இந்திய உற்பத்தியினை பெருக்க வேண்டும். இறக்குமதியினை குறைக்க வேண்டும் என்ற பரப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அரசு தரப்பிலும், அதிரடியான பல நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. 

 தற்போது வெளிநாட்டில் இருந்து பாதுக்காப்புத் துறைக்கு இறக்குமதி செய்யும் 101 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பாதுகாப்பு துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

சுயசார்பு என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியம் என பார்க்கப் பட்டால் , நமது நாட்டின் பெரும்பாலான ராணுவ சாதனங்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அரசு சுயசார்பு என்ற  பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்து நமது சுற்றுச்சூழலை அழித்து விடுமோ என்ற கேள்வி எலாமல் இல்லை. தற்போது அரசு வெளியிட்ட சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு ,சட்டமாக மற்ற உள்ள நிலையில் ,அந்த வரைவில் சமூக ஆய்வாளர்கள் அதிக முரண்பாடுகள் வைத்தது இதில் குறிப்பிடத்தக்கது