tamilnadu

img

தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது - மகாராஷ்டிரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படாது என்று மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. நாட்டில் பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது.
இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  ஆனால் மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று பரவல் குறையாததால், பள்ளிகள் திறக்க தாமதமாகலாம் தீபாவளிப் பண்டிகைக்கு முன் பள்ளிகள் நிச்சயம் திறக்கப்படாது என்று மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.