tamilnadu

img

டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை

நாடு முழுவதும் டிசம்பர்  வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை ஒரு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில்  பள்ளி கல்லூரிகள் தற்போது மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் தற்போது ஆன்லைனில் வகுப்புககள் எடுத்து வருகின்றன.  இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழுகூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பவர் மாதம் வரை பள்ளிகள் திறக்கவாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலர்  தெரிவித்துள்ளார். மேலும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என்று அமித்காரே தெரிவித்துள்ளார்.