நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக தானியங்கள் மற்றும் சமையல் செலவுக்கான முதல் தவணை உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.
1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும் ரூ.290 ரொக்கமும், 6 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.390ரொக்கமும் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் சென்று பெற்றோர்கள் வாங்கிக்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.