tamilnadu

img

மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் ஒ.பி.சிக்கு எதிரான அறிவிக்கையை திரும்பப் பெற்றிடுக!

மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

“இடஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் முயற்சியின் துவக்கமாக சந்தேகிக்கிறோம்”

புதுதில்லி, நவ. 28- அகில இந்திய மருத்துவ  உயர் கல்விக்கான நீட் தேர்விற்கான அறி விப்பு வெளி வந்துள்ளது.  அந்த  அறிவிப்பில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு மட்டும் இல்லை. அதாவது மத்திய அரசினு டைய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு உள்ளது;  மாநிலங்களின் கல்லூரியிலிருந்து பெறுகிற இடங் களுக்கு ஒ.பி.சி.க்கான இடமில்லை என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.  இது மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கு கிறது.  நாடு முழுவதும் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான பிரிவில் ஏறக்குறைய மூவாயிரத்து எண்ணூறு  மாணவர்கள் இருக்கிறார்கள்.  இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது தமிழ கம். ஏனென்றால் தமிழகத்தில் தான்  மிக அதிகமான மருத்துவக் கல்லூரி கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய எண்ணிக்கை மிக அதிகம் இருக்கும் ஒரு மாநிலம்.  தமிழக அரசினுடைய இட ஒதுக் கீட்டில் ஐம்பது சதவீதம் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இன்றைக்கு தமிழகத்தில் அமலிலே இருக்கிறது.

இதை மாநில அரசு  மத்திய தொகுப்புக்கு கொடுப்பதன் மூலம் இருபத்தி மூன்று சதவீதத்தை நாங்கள் இழக்கிறோம். ஏனென்றால் இருபத்தி ஏழு சதவீதம் தான் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இப்பொழுது அந்த  இருபத்தி ஏழு சதவீதமும் இல்லை யென்றால் ஏறக்குறைய ஐம்பது சத வீதத்தையும் அதாவது முழு முற்றாக இட ஒதுக்கீட்டையும் ஒ.பி.சி பிரிவினர் இழக்கிற மாநிலமாக தமிழகம் மாறிவிடும். இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த பின்னும் இப்பொழுது வரை மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது.  இது மிகப்பெரிய ஆபத்தின் முன்னுதாரணம் ஆகும். சமமற்றவர்களை சமமாக நடத்தக் கூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் சாரம். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக சமமற்றவர்களை சமமாக நடத்தக் கூடாது என்று அரசியல் சாசனம் சொல்கிறது. 

அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமையை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் மத்திய அரசின் ஒரு துறை இதனை மறுக்கிறது. அதனை மத்திய அரசு கள்ளத்தனமாக அனுமதிக்கிறது என்றால்,  இந்த அரசின் செயல் ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்குவதாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியின் துவக்க மாக இது இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.  இது அரசியல் சாசன சட்டத்துக் கும், மண்டல் கமிஷன் அறிக்கைக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோத மானது.  பிற்படுத்தப்பட்ட மக்களின்  மீதான இந்த இரக்கமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்மந்தப் பட்ட துறையினுடைய இந்த அரசா ணையை திரும்பப் பெற வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை இந்த அவையிலே வலியுறுத்துகிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.